கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ; 17 மாணவர்கள் பலி

Published By: Digital Desk 3

06 Sep, 2024 | 01:37 PM
image

கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

10 க்கும் மேற்பட்டோர்  பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

குறித்த தீ விபத்து சம்பவம் Nyeri மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கென்யாவில் விடுதிகள் உள்ள பாடசாலைகளில் தீ விபத்து ஏற்படுவது வழமையான ஒன்றாக இருக்கிறது.

2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பெண்கள் பாடசாலையில் 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 20 ஆண்டுகளுக்கு முன்பு நைரோபியின் தென்கிழக்கே உள்ள மச்சகோஸ் கவுண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 67 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே கார்...

2025-11-10 20:15:35
news-image

ஈக்வடோர் சிறைக் கலவரத்தில் 31 கைதிகள்...

2025-11-10 17:20:59
news-image

பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர்...

2025-11-10 11:20:06
news-image

பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர்...

2025-11-10 11:41:39
news-image

தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் ரோஹிங்கியாக்களின்...

2025-11-10 10:05:23
news-image

ஜப்பானில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்...

2025-11-09 15:18:58
news-image

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2025-11-09 12:20:05
news-image

தெற்கு பிரேசிலில் சூறாவளி ;  06...

2025-11-09 11:32:30
news-image

அமெரிக்காவில் 1,400க்கும் மேற்பட்ட விமான சேவைகள்...

2025-11-09 10:28:35
news-image

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

2025-11-08 15:33:48
news-image

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை...

2025-11-08 14:08:37
news-image

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ;...

2025-11-08 12:50:02