மன்னாரில் மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம் என்று கோரி வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

05 Sep, 2024 | 04:19 PM
image

மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம் என்று கோரி  மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கடந்த செவ்வாய் கிழமை (03)  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.  

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது 'நியாயமான குரல்களை நசுக்காதே' 'தொழிற்சங்க உரிமைகளை நசுக்காதே' ' மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம்' போன்ற வாசகங்களை ஏந்தியவாறு வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வைத்தியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,

நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் நோயாளிகள் தகுந்த முறையில் மருந்து வகைகளை பெற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

நோளார்களுக்கு மருந்து வகைகளை வெளியில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும்போது வைத்தியர்களாகிய எங்களை பொது மக்கள் திட்டும் நிலைக்கு நாங்கள் உள்ளாகி வருகின்றோம். 

அரசானது வைத்தியசாலைகளுக்கு சரியான முறையில் மருந்து வகைகளை வழங்காமையால் நாங்கள் நோயாளர்களுக்கு தகுந்த பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். 

இதனால் வைத்தியர்களாகிய நாங்கள் உண்மை நிலையை எடுத்தியம்பும் முகமாக கவனயீர்ப்பு போரட்டத்தை ) நடாத்துகின்றோம் என்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47
news-image

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான...

2025-03-16 09:47:17