சர்வதேச நாணயநிதியத்துடனான சமீபத்தைய திட்டம் தொடரவேண்டும்-இலங்கையின் வெளிவிவகார கொள்கை ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாது-எரான்

Published By: Rajeeban

05 Sep, 2024 | 11:50 AM
image

ஐக்கிய மக்கள் சக்தி தனது எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று இரவு  தொழில்முறை மற்றும் வணிக சமூகத்திற்கு வெளியிட்டது. கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித்பிரேமதாசவின் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாதார மூலவர்களான ஹர்ச டி சில்வா எரான் விக்கிரமரட்ண கபீர்ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணயநிதியத்துடனான சமீபத்தைய திட்டம் தொடரும் என இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ள  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண  என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

சரியானதை செய்வது எப்போதும் அரசியல் ஆதாயமாக மாறாது.

சஜித்பிரேமதாச தலைமையிலான  எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் குறுக்கிடாது.

மாறாக வர்த்தக நடவடிக்கைளிற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துவோம்.

சர்வதேச நாணயநிதியத்துடனான சமீபத்தைய திட்டம் தொடரவேண்டும்நுண்பொருளாதார அளவில் மாற்றங்கள் அவசியம்ஆனால் சமூக ஸ்திரதன்மையும் அவசியமும்.

நாங்கள் சமூக ஜனநாயகத்தை நம்புகின்றோம் முடிவிற்கு ஒரு வழியிருக்கவேண்டும் ஆனால் அந்த வழிமுறை சிறந்ததாகயிருக்கவேண்டும்.

சிறந்த முடிவை எடுப்பதற்கான அதிகாரப்பகிர்விற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

சுதந்திரமான தொழில்நிறுவனங்களை நாங்கள் நம்புகின்றோம் அவை செல்வத்தை வளத்தை உருவாக்குகின்றன.ஆனால் இதனை சமூக சந்தை பொருளாதாரத்தில் செய்யலாம்.

இலங்கையின் வெளிவிவகார கொள்கை ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாதுஇந்திய துணைக்கண்டத்திலிருந்து வருடாந்தம் 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை கவரும் இலக்கை இலங்கை கொண்டிருக்கவேண்டும்.

இலங்கைகையை பொறுத்தவரை முக்கிய பிரச்சினை என்னவென்றால் சட்டத்தின் ஆட்சியே சட்டத்தின் ஆட்சியை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தினால் வெளிநாடுகளின் அதிகளவு முதலீடுகளையும் நம்பிக்கையையும் பெறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடைநிறுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை...

2025-01-25 19:10:24
news-image

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும்...

2025-01-25 17:23:37
news-image

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத்...

2025-01-25 19:08:44
news-image

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து...

2025-01-25 19:07:42
news-image

ஊழல், மோசடி விசாரணை கோப்புக்கள் மீளத்...

2025-01-25 17:35:45
news-image

புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள்...

2025-01-25 17:29:59
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்...

2025-01-25 21:57:28
news-image

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை...

2025-01-25 17:16:14
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு செல்லப்பிராணிகளை குறைகூறுவது வெட்கக்கேடான...

2025-01-25 19:05:39
news-image

மோசடியாளர்களை கைது செய்யும்போது அரசியல் பழிவாங்கல்...

2025-01-25 17:11:05
news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58