நமுனுகலை பகுதியில் கஞ்சா கலக்கப்பட்ட 1,750 லேகியப் பக்கெட்டுகளுடன் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் பசறைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, நமுனுகலை நகருக்கு விரைந்த பொலிசார் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தை சோதனையிட்டபோது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றை கண்டுபிடித்தனர்.
குறித்த பெட்டியை திறந்த பொலிஸார், கஞ்சா கலக்கப்பட்ட 1,750 லேகியப் பக்கெட்டுகளை அதிலிருந்து மீட்டதுடன் குறித்த வர்த்தக உரிமையாளரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, பசறைப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM