பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்பார்க்கிறோம் : கல்வி அமைச்சர்

Published By: Digital Desk 7

03 Sep, 2024 | 06:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ரோஹினி எம்.பி. தெரிவிக்கையில், நாடு பூராகவும் 18ஆயிரம் பதில் அதிபர்கள் கடமையில் இருந்து வருகின்றனர். அவர்களை அதிபர்களாக அவ்வாறே நியமிப்பதா அல்லது அவர்களுக்கு எடுக்க இருக்கும் நடவடிக்கை என்ன? அதேபோன்று அபிவிருத்தி அதிகாரிகளாக பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவை செய்துவரும் 16ஆயிரம் ஆசிரியர்கள் தொடர்பில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறேன் என்றார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்ந்து பதிலளிக்கையில்,

பதில் அதிபர்களாக கடமை செய்துவரும் 18ஆயிரம் அதிபர்கள் கஷ்டப்பிரதேச பாடசாலைகளிலேயே சேவையாற்றுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, அது அரச சேவை ஆணைக்குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அரச சேவை ஆணைக்குழுவின் கொள்கைக்கமைய அந்த விடயம் மிகவும் கஷ்டமான நிலைக்கு சென்றது. என்றாலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால் வழக்கு விசாரணையை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் நாங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்பார்த்து இருக்கிறோம்.

அத்துடன் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. என்றாலும் தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை ஆரம்பத்தில் இடம்பெற்று வந்தது. என்றாலும் தற்போது அரச சேவை ஆணைக்குழுவின் புதிய சட்டத்தின் பிரகாரம் தேசிய பாடசாலை,  மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்றம் செய்ய முடியாது. 

அதனால் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மாகாண ஆளுநர்களின் ஒப்புதலை எடுத்துக்கொண்டு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்

மேலும், பாடசாலைகளில் தற்போது அபிவிருத்தி அதிகாரிகளாக இருக்கும் 16ஆயிரம் ஆசிரியர்களை அந்த பாடசாலைகளில் தொடர்ந்து ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள இருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழியாென்றை ஒரு வாரத்துக்குள் பரிந்துரைக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04