ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் யார்? சமூக வலைத்தள கருத்துக்கணிப்பில் ஈடுபடுவது சட்டவிரோதமானது - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Vishnu

02 Sep, 2024 | 08:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதை ஒத்திகை பார்த்து அதனை காணொளியாக பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ள தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக கருத்து  கணிப்புக்களை  மேற்கொள்ளும் தரப்பினர் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒருசில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்துக்கு முரணாகவே செயற்படுகிறார்கள். தமது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் சட்டத்தை மீறும் ஆதரவாளர்களின் செயற்பாட்டுக்கு குறித்த வேட்பாளர் பொறுப்புக் கூற வேண்டும்.

தேர்தல் சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஆகவே தேர்தல் சட்டத்துக்கு அமைய சகல வேட்பாளர்களும் செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

ஒருசில ஊடகங்கள் இன்றும் குறிப்பிட்ட ஒருசில வேட்பாளர்களுக்காகவே செயற்படுகின்றன. ஊடகங்களில் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் காலவகாசம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அன்றாடம் எமக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது.அதில் ஒருசில இலத்திரனியல் ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுகிறது.

ஒருசில அச்சு ஊடகங்களும் குறிப்பிட்ட ஒருசில வேட்பாளர்களுக்கு சார்பாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது..இயலுமான வரை சகல வேட்பாளர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எமது அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:04:57
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42