இறைவரி திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் பண மோசடி ; இருவர் கைது

Published By: Digital Desk 2

31 Aug, 2024 | 06:01 PM
image

உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் என கூறி அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் பெண் உட்பட இருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆணும், பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 29ஆம் திகதி தர்கா நகரத்தில் உள்ள நகை கடை ஒன்றுக்கு சென்று தங்களை இறைவரி திணைக்கள அதிகாரிகள் என அடையாளப்படுத்தி குறித்த நகைக்கடையின் வருமான வரி ஆவணங்கள் மற்றும் வணிகப் பதிவை சரிபார்த்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நகைக்கடையில் இருந்த ஊழியர்கள் இந்த இருவர் மீதும் சந்தேகம் கொண்ட நிலையில் அவர்களை பிடித்து அளுத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்த அடையாள அட்டை போலியானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச்...

2025-02-18 13:08:22
news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20