நாமல் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது - பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா

Published By: Digital Desk 7

29 Aug, 2024 | 07:56 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை தீயிட்டு கொளுத்துவதற்கு இடமளிக்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்காமல் இருந்திருந்தால், நாடு பங்களாதேஷை விட கீழ் மட்டத்திற்கு வீழ்ந்திருக்கும். இலங்கையில் அவ்வாறானதொரு சூழல் ஏற்படக் காரணமானவர்கள் ராஜபக்ஷர்களே. எனவே நாமல் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 102 பேர் ராஜபக்ஷர்களை விட்டு வெளியேறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர். 35க்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவாக வந்துள்ளன. 112க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆட்சி கையளிக்கப்பட்ட போது ராஜபக்ஷ குடும்பமே அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தது. அதுவே அவர்களது தோல்விக்கும் வழி வகுத்தது.

எனவே பரீட்சித்துப் பார்ப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்ததைப் போன்ற தவறை ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதன் மூலம் மக்கள் செய்து விடக் கூடாது.

2022இல் நாட்டில் நிலவிய அரசியல், பொருளாதார நெருக்கடிகளின் போது வன்முறைகள் தலைதூக்கின. அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருந்து மக்கள் மரணித்ததை மறக்க முடியாது. அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பளித்து விடக் கூடாது. எனவே ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

ராஜபக்ச அரசாங்கம் எம்மை வீதியில் நடக்க முடியாத நிலைக்கு ஆளாக்கியது. இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை மாற்றியமைத்தார்.

முப்பது வருடங்களாக மக்களுடன் உழைத்து கட்டியெழுப்பிய அரசியல் அந்தஸ்தையும் ராஜபக்ஷர்கள் அழித்துவிட்டனர். நாமல் ராஜபக்ச ஆட்சிக்கு வருவது கனவில் கூட நடக்காது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02