பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவது மீண்டும் நெருக்கடிக்குள் செல்வதற்கே வழிவகுக்கும் - நந்தலால் வீரசிங்க 

Published By: Vishnu

28 Aug, 2024 | 03:18 AM
image

(நா.தனுஜா)

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இருவருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

 கொழும்பில் நடைபெற்ற இலங்கை தொழில்வல்லுனர் அமைப்பின் 37 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயற்முறையானது நடுத்தர - நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்தோடு குறுங்கால மறுசீரமைப்புக்கள் கடினமானவையாக இருப்பினும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது நிலைபேறான வளர்ச்சியை நோக்கிய பாதையில் நாட்டை நகர்த்திச்செல்வதற்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் நாட்டின் நிகழ்கால மற்றும் எதிர்கால சுபீட்சத்துக்கு நிதி மற்றும் கடன் ஸ்திரத்தன்iயை மீள அடைந்துகொள்ளவேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும்...

2026-04-22 19:48:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள்...

2026-04-22 19:39:24
news-image

$2.5 மில்லியன் சென்றது யாருடைய கணக்கிற்கு?...

2026-04-22 19:37:40
news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33