உத்தேச திறன் விருத்தி வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானம்

27 Aug, 2024 | 09:07 PM
image

தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் முன்னுரிமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக முன்னொழிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிகளாக, மாணவர் மைய நிதித்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலமாக ஒரு வருடத்தில் 50,000 பேர் வீதம் தொழில் அடிப்படையிலான பயிற்சி புலமைப்பரிசில்களை மாணவர்களுக்கு வழங்கல்.

இரண்டாம்நிலைக் கல்வி பயில்கின்ற மாணவர்களை இலக்காகக் கொண்ட 60,000 தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான வாய்ப்புக்களை வழங்கல் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தற்போது அரச மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாட்டுடன் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்வதற்கு இயலுமாகும் வகையில் திறைசேரியால் 2025 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் 05 வருடங்களுக்கு நிதியொதுக்கீடு செய்வதற்கும், தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் , அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழு மற்றும் கல்வி அமைச்சும் இணைந்த குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் , தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35