முகநூல் நண்பர்களுடன் இணைந்து போதைப்பொருள் விருந்து ; 43 இளைஞர், யுவதிகள் கைது

27 Aug, 2024 | 05:04 PM
image

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலில் அறிமுகமான நண்பர்களுடன் இணைந்து போதைப்பொருள் விருந்து நடத்தியதாகக் கூறப்படும் 43 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை, மாரவில, கிரிந்திவெல,ஹிங்குரக்கொட, பூகொடை, நீர்கொழும்பு, ஜா - எல மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்களில் 10 யுவதிகளும் 33 இளைஞர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களில் பல்கலைக்கழக மாணவர்களும், வர்த்தகர்களும் காணப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் சிகரெட்டுகள் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14