இறந்த முன்னாள் தாய்லந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்ஜின் இறுதிச் சடங்குகள் பற்றிய அறிவிப்பை, 6 மாதங்கள் கடந்த நிலையில் அந்நாட்டு அரசு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி சுகயீனம் காரணமாக தனது 88 ஆவது வயதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மரணத்தை ஒட்டி, ஒரு வருட காலத்தை அந்நாட்டு அரசாங்கம் துக்கவருடமாக அறிவித்திருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி அவரது உடல் பாங்கொக் நகரிலுள்ள தேசிய சதுக்கத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளமைக்கு இறந்த பூமிபால் அதுல்யதேஜின் மகனும், தற்போதைய மன்னருமான மகா வஜிரலோங்காரன் ஒப்புதல் அளித்துள்ளதோடு, மன்னரின் அரண்மனையும் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.
தாய்லாந்து மன்னராக பூமிபால் அதுல்யதேஜ் 18 வயதில் பதவியேற்று, சுமார் 70 வருடங்கள் மன்னராக பதவி வகித்திருந்தார். அவரின் இறுதிச்சடங்குகள் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என அந்நாட்டு துணைப்பிரதமர் விஸ்சானு கிரியா நகம் அறிவித்துள்ளார்.
அத்தோடு மன்னரின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், புதிய மன்னராக மகா வஜ்ஜிரலங்காரனுக்கு முறைப்படி முடிசூட்டும் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதோடு, தாய்லாந்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM