மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் பதிவு - மன்னார் வைத்திய அதிகாரி

24 Aug, 2024 | 04:38 PM
image

மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அங்கு டெங்கு நோய் அபாயம் அதிகரித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிர்காமநாதர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த 2023ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு சிறிதளவு அதிகரித்துள்ளது.

வழமையாக ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மன்னாரில் டெங்கு அபாயம் ஏற்படும். ஆனால், இவ்வருடத்தில் சற்று நேரத்துடனே டெங்கு அபாயம் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

நீடித்த காய்ச்சல், கண்ணுக்குப் பின்னால் வலி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்று இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

இது தொடர்பாக அரச வைத்தியசாலையை நாடுவது மிகவும் சிறந்தது.

தற்பொழுது டெங்கு நோய் காணப்படும் இடங்களாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வங்காலையும், மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சாவக்கட்டும் இனங்காணப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23