மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அங்கு டெங்கு நோய் அபாயம் அதிகரித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிர்காமநாதர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த 2023ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு சிறிதளவு அதிகரித்துள்ளது.
வழமையாக ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மன்னாரில் டெங்கு அபாயம் ஏற்படும். ஆனால், இவ்வருடத்தில் சற்று நேரத்துடனே டெங்கு அபாயம் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
நீடித்த காய்ச்சல், கண்ணுக்குப் பின்னால் வலி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்று இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
இது தொடர்பாக அரச வைத்தியசாலையை நாடுவது மிகவும் சிறந்தது.
தற்பொழுது டெங்கு நோய் காணப்படும் இடங்களாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வங்காலையும், மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சாவக்கட்டும் இனங்காணப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM