மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கார் வீதியின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதுடன் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பஸ்ஸிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் கிமீ 80. 9 தூண் அருகில் இந்த விபத்து இடம்பெற்று உள்ளது.
இவ்விபத்தில் 16 மற்றும் 21 வயதுடைய இரு மகன்களும் அவர்களது தாயும் காயமடைந்துள்ளனர்.
விபத்தின் போது 21 வயது மகனே காரை செலுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வழியாக சென்ற சாரதிகள் காரில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க துரித நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM