(நெவில் அன்தனி)
பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
3 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே பறிகொடுத்த இலங்கைக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அயர்லாந்து தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

அணித் தலைவி சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டம், ஹர்ஷித்தா சமரவிக்ரமவின் திறமையான துடுப்பாட்டம் என்பன இலங்கையின் இலகுவான வெற்றிக்கு வழிசமைத்தன.
அப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 123 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 23.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
சமரி அத்தபத்து 48 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றனர். கவிஷா டில்ஹாரி 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
மத்திய வரிசையில் ஆலின் கெலி (35), லீ போல் (19) பின்வரிசையில் அலிஸ் டெக்டர் (17), ஃப்ரியா சாஜன்ட் (16), எய்மி மெகயர் (10 ஆ. இ.) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பு வழங்கினர்.
பந்துவீச்சில் சமரி அத்தபத்து 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அச்சினி குலசூரிய 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சச்சினி நிசன்சலா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: சமரி அத்தபத்து, தொடர்நாயகி: ஆலின் கெலி















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM