சஜித் ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை; தயாசிறி ஜயசேகர ஜனாதிபதிக்கு பதில்

Published By: Vishnu

20 Aug, 2024 | 02:51 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சஜித் பிரேமதாசவின் நிபந்தனைகளை கோத்தாபய ராஜபக்ஷ் ஏற்றுக்கொள்ள மறுத்ததாலே பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச மறுத்துவிட்டார். ஆனால் ரணில் விக்ரமசிங்க நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டுள்ளதால் இன்று திருடர்களுடன் இணைந்துசெயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு முடியும் ஆனால் ரணிலுக்கு முடியாது என்பதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மாவனெல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமல் சஜித் பிரேமதாச ஏன் தப்பிச்சென்றார் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மக்கள் போராட்டம் காரணமாக நாட்டின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகினார். அதனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தபோது, சஜித் பிரேமதாச 2022,5,12ஆம் திகதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

குறித்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தார். குறிப்பாக குறித்த காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும், 2 வாரங்களுக்குள் 19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் போன்ற நிபந்தனை தெரிவித்திருந்தார். இந்த நிபந்தனைகளை கோத்தாபய ராஜபக்ஷ் ஏற்றுக்கொள்ள மறுத்ததாலே சஜித் பிரேமதாச அன்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க எந்த நிபந்தனையும் இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதனால்தான் இன்று அவர் திருடர்களுடன் இணைந்து செயற்பட வேண்டி ஏற்பட்டுள்ளது.அன்று சஜித பிரேமதாச அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், இந்த நிலையே ஏற்பட்டிருக்கும். அப்படியானால் சஜித் ராஜபக்ஷ் என்றே மக்கள் தெரிவித்திருப்பார்கள். அதனால் சரியான தீர்மானம் எடுத்த சஜித் பிரேமதாசவை எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக்குவோம்.

மேலும் இயலும் சிறிலங்கா என ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகிறார். இலங்கைக்கு இயலும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ரணிலால் முடியாது. ஏனெனில் 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியை ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்கும்போது 94 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

ஆனால் அது படிப்படியாக குறைவடைந்து, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் மாத்திரே கிடைத்தது. ஐக்கிய தேசிய கட்சியை அவர் அழித்துவிட்டார். அதனாலே அவரால் முடியாது என்கிறோம்.

அதேபோன்று 2005இல் தாேல்வியடைந்தபோது, 2010இல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து ஒதுங்கி இருந்தார். அதேபோன்று 2015இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து ஒதுங்கி இருந்தார். 2020ல் சஜித் பிரேமதாசவை நியமித்து, அவரை வெற்றிபெறச் செய்யாமல் காலை இழுத்தார். அதனாலே இலங்கையால் முடியும் ஆனால் ரணிலால் முடியாது என்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00