(லெட்சுமன் அபிலாஷனி)
இலங்கையிலுள்ள தேயிலைத்தூள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த சிறப்பு வாய்ந்த நிறுவனங்களுள் Sunshine Tea Private Limited முக்கியமானதொன்றாகும். களனி பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பிரதான அம்சமாக தேயிலைத்தூள் ஏற்றுமதி காணப்படுகின்றது.
இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்தும் அதன் தொழிற்பாடுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் களப்பயணம் ஒன்று அண்மையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, நிறுவனத்தின் தொழிற்பாடுகள் குறித்து அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான சஞ்சீவ சரனபால விளக்கமளிக்கையில்,
1967 ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு SKS Exports என்ற பெயரில் நிறுவனம் புதுபிக்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டு sunshine Tea Private Limited என பெயர் மாற்றப்பட்டது.
sunshine Tea Private Limited நிறுவனத்தின் தாய் நிறுவனம் சன்சைன் ஹோல்டிங்ஸ் PLC ஆகும். https ://www.sunshinetea.lk என்ற இணையத்தளத்திற்கு உட்புகுந்து sunshine Tea Private Limitet நிறுவனத்தின் தகவல்கள் தொடர்பாக அறிந்துகொள்ள முடியும்.
அத்தோடு, இந்நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதோடு, தொழிற்சாலையில் 25 பெண் தொழிலாளர்களும், 75 ஆண் தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதி என்ற வகையில் இரு பிரிவுகளாக பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் உற்பத்தி தொகுப்புப் பட்டியலில் முன்னணி வணிகக்குறிகளாக Zesta, watawala, Gordon frazer, Avan Tea, Teazup போன்றன காணப்படுகின்றன.
அத்தோடு, நிறுவனத்தின் கீழ் தேயிலை பயிரிடப்படவில்லை. தேயிலைத்தூள் ஏற்றுமதி மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் 70 - 80 வரையான பங்களிப்பு காணப்படுகிறது. நாளாந்தம் 1.5 மில்லியன் கிலோ கிராம் தேயிலை பொதியிடப்படுகின்றன.
தேயிலை பதப்படுத்தும் திறனானது ஆண்டுக்கு 11 மில்லியன் கிலோ கிராமிற்கு அதிகமான தேயிலை பதப்படுத்துவதோடு பொருளாதார ரீதியிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிறுவனம் வேலை வாய்ப்பு மற்றும் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் நிறுவனமாக காணப்படுகின்றது. வேலை வாய்ப்புகள் வழங்கும் போது பயிற்சி மற்றும் வளர்ச்சிகள் பற்றி அதிக கவனம் செலுத்துகிறது.
அத்தோடு, great place to work (GPTW) Srilanka அமைப்பினால் 2024 ஆம் ஆண்டு உற்பத்தி, தயாரிப்பிலும் சிறந்த 15 பணியிடங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் இடம் பிடித்துள்ளது.
இந் நிறுவனம் சமூக பொறுப்புமிக்க நியாயமான வர்த்தக நடைமுறைகளோடும் முக்கிய சந்தைகள் மற்றும் குறிப்பிட்ட நுகர்வோர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நிறுவனமாக காணப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிறுவனம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நிறுவனத்தின் முக்கிய சிறப்பு அம்சங்களாக உலகளவில் முன்னிலை தேயிலைத்தூள் ஏற்றுமதியாக அங்கீகரிக்கப்பட்டு காணப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தங்களது தயாரிப்புக்களை வழங்குவதோடு எதிர்காலத்திலும் பல்வேறு வகையான உற்பத்திகளை அறிமுகபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.
Sunshine Tea private Limited நிறுவனத்தின் துணை பொது மேலாளராக பணியாற்றும் சமீர ராஜாபக்ஷ தெரிவிக்கையில்,
நிறுவனம் நவீன இயந்திரங்கள், தொழிநுட்பத்துடன் கூடிய நவீன பதப்படுத்தும் தொழிற்சாலை என்ற வகையில் உயர்தர வசதிகள் கொண்டு காணப்படும் வர்த்தக நிலையமாக முன்னிலை வகிக்கின்றது.
அத்தோடு, தேயிலைத்தூள் உற்பத்தியானது பல பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைகளை உரிய முறையில் பிரித்தெடுக்கப்பட்டு 05 படிமுறைகளின் கீழ் தேயிலை பதப்படுத்தப்படுகின்றன.
தேயிலைகளை பதப்படுத்தும்போது, தேயிலையை தூய்மைபடுத்துவது முக்கியமானதொன்றாக காணப்படுகிறது.
ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேர அளவின் படி 14,855 கிலோ கிராம் தேயிலை பல்வேறு ஒழுங்குபடுத்தலுக்கு அமைய அரைக்கப்படுகின்றன.
தேயிலை பதப்படுத்தல் மற்றும் அரைத்தல் போன்றவற்றிற்கு பின்னர் இறுதியாக தேயிலைக்கு வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்படும்.
இந்த வாசனை திரவியங்கள் ஜேர்மன் நாட்டிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. இதனால் தேநீர் சுவையானதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும்.
அத்தோடு, தேயிலையில் வாசனை திரவிய பயன்படுத்துவதனால் உடல் ரீதியாக ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா ? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் ISO 9001 சான்றிதழ், FSSC 22000 சான்றிதழ், GMP (நல்ல உற்பத்தி நடைமுறைகள்) சான்றிதழ் , Fair Trade சான்றிதழ் , Rainforest Alliance சான்றிதழ், Organic சான்றிதழ், Halaal சான்றிதழ் மற்றும் SMETA ( sedex Members ethical Trade Audit) சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெற்ற நிறுவனம் என்பதாலும் உரிய முறையில் உற்பத்தியினை மேற்கொள்வதாலும் பக்கவிளைவுகள் ஏற்படாது என்று தெரிவித்தார்.
தேயிலை உற்பத்தி முடிவடைந்து தேயிலையின் தரத்தினை உரிய முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி தயாரிப்பு திட்டமிடல் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், அந்நிறுவனத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்புக்கள் அனைத்தும் தனித்தனியாக தயாரிப்பதோடு, Zesta, Watawala , Gordon Frazer, Avan tea மற்றும் Teazup ஆகிய உள்நாட்டு தயாரிப்புக்களோடு, வெளிநாட்டு தயாரிப்புக்கள் ஈரான், ஈராக், ஐக்கிய அமெரிக்கா, கனடா, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
நிறுவனத்தின் துணை பொது மேலாளராக பணியாற்றும் சமீர ராஜாபக்ஷ மற்றும் P.A. Management ஆக பணியாற்றும் கபில சம்பத்தினால் தேயிலை பொதியிடல் பிரிவு பற்றி தெரிவிக்கையில்,
பொதியிடல் பிரிவில் உள்நாடு, ஏற்றுமதி என தனித்தனி பிரிவுகள் உள்ளது. இயந்திர உதவியுடன் சிறுபொதிகள் , பரிசு பொருட்களாக தேயிலைத்தூள் பொதிகள் என பல வகைகளில் பொதியிடப்படுகின்றன.
பொதியிடும் போது பொதியிடலுக்கு அவசியமான பொதிக்கான பைகள், label போன்றவற்றை வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு அமைவாக பொதி செய்து வழங்கப்படுகின்றது. அத்தோடு, தேயிலை பைகளில் staple pins பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதோடு, அதற்கு பதிலாக முடிச்சுக்கள்/ வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு தேயிலைத்தூள் கலவைகள் அடங்கிய பொதிகளும் மெருகேற்றப்பட்ட உறைகளில் பொதி செய்யப்படுகின்றன.
Sunshine Tea Private Limited நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரி விரோச்சன மஹாநாம தேநீரின் தரம் பற்றி தெரிவிக்கையில்,
தேயிலை பெற்றுக் கொள்ளும் பிரதேசங்களுக்கு அமைவாக தேயிலையின் தரம் காணப்படுகிறது.
கண்டி, திம்புள்ள , நுவரெலியா , உடப்புஸ்ஸல்லாவை , ஊவா, ருஹுண மற்றும் சப்ரகமுவ போன்ற பிரதேசங்களில் இருந்து தேயிலையை பெற்றுக்கொண்டு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றில் தற்போது ஊவா பகுதியில் இருந்து பெற்றுக்கொண்ட தேயிலைகள் உற்பத்திக்கு அதிகளவாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீர் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையினைக் கொண்டதாக காணப்படும்.
அத்தோடு, L/G OPI , OPA , PEK, FBOP, BOP, BOPE , Dust - 1 , Dust , Silver Tips , Golden Tips , Zesta, Watawala மற்றும் ran kagata போன்ற தேயிலைத்தூள் தயாரிப்புக்களும் காணப்படுகிறது.
Sunshine Tea Private Limited நிறுவனத்தின் தயாரிப்புக்கள் அனைத்தும் பல்வேறு ஆய்வுகளுக்குட்படுத்திய பின்னரே பொதி செய்யப்படுகின்றன. இவை தவிர்த்து பல்வேறு வகையான தேயிலை தயாரிப்புக்களையும் அறிமுகம் செய்துள்ளதோடு எதிர்காலத்திலும் பல்வேறான உற்பத்திகளை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM