திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன - மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கி பயணம் செய்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவராவார்.
மேலும், காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஆகியோர் புஹுல்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹாகொட பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM