அன்றாட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு ஒழுங்கான தூக்கம் அவசியமானதாகும். அந்த வகையில் இலங்கை வாழ் மக்களின் தூக்கப் பழக்கவழக்கம் தொடர்பில் அதிருப்தியான நிலைப்பாடுகள் உள்ளது என மருத்துவத்துறை நிபுணர்கள் கூறி வருகின்றார்கள்.
தூக்கம் நமது உடலில் இழந்த செல்களை புதுப்பிப்பதுடன், மூளையின் செயல்பாட்டிற்கும், நினைவாற்றலுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியின் வளர்ச்சிக்கும், ஹோர்மோன் சுரப்பு சமநிலைக்கும் தேவையானதாக இருக்கிறது.
அசதி, கவனக்குறைவு, ஞாபக மறதி, மன உளைச்சல், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடு, கல்லீரல் மற்றும் குடல் சார்ந்த நோய்கள் போன்றவற்றிற்கும் தூக்க குறைபாடு காரணமாக இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. தூக்கக் குறைபாடு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றன.
இலங்கையில் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளும் அதில் சுமார் 25 சதவீதமானவை தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள். நல்ல தூக்கம் இல்லாத இந்த போக்கு பல்வேறு உடல் நல பிரச்சனைக்கு வழிவகுக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் ஏனோகாவிக்கிரமசிங்க கூறுகின்றார்.
மேலும் இவர் தெரிவிக்கையில் தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு உட ன மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன இதன் காரணமாக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகள் செல்லும் மாணவர்களுக்கு நிலையான நிலை மாற்றல் ஏற்படுத்துவதற்கும் நல்ல தூக்கம் அவசியம் எனவே பிள்ளைகள் நல்ல ஆழ்ந்த குழப்பமற்ற உறக்கத்தை பெறுவதை உறுதிப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் பெரும்பாலான பெற்றோர்கள் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட அதிக நேரத்தை செலவழித்து இந்த நிலையில் தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக அவர்கள் தங்களது குழந்தைகளிடம் மொபைல் போன்களை வழங்குகின்றார்கள்.
இதனால் அதற்கு அடிமையாகும் போக்கு குழந்தை இடத்தை ஏற்படுகிறது இதனால் அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதோடு தூக்கமும் தொலைகிறது. இது குறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
தினமும் நபரொருவர் 7 முதல் 8மணி நேரம் தூங்குபவர்களுக்கு நோயின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கிறது. ஆகவேநமது உடல் நலம், மன நலம் போன்றவற்றுக்கு உணவு, உடை, உறையுள் போன்றவை எந்தளவு அவசியமோ தூக்கமும் அதே அளவு அவசியமானதே.
கிறிஸ்றீனா சகாயதாசன்
ஊடகத்துறை
யாழ்.பல்கலைக்கழகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM