கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறையின் பின்னர் கொலை - எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டம் - நாங்கள் கால்நடைகளை விட பெறுமதியற்றவர்கள் என வேதனை

Published By: Rajeeban

17 Aug, 2024 | 07:31 PM
image

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கடந்த ஒரு வாரகாலமாக கொல்கத்தாவில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பையும் சேர்ந்த பெண்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை கொல்கத்தாவில் பொலிஸாருக்கும் சிறிய குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்ற மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் மருத்துவமனையின் அவசரசேவை பிரிவை சேதப்படுத்தியுள்ளனர்.

இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகத்தில் ஈடுபட்டனர், சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

கொல்கத்தாவின் ஏனைய பகுதிகளில் இரவில் மொபைபோனின் வெளிச்சத்தினையும்,மெழுகுதிரிiயையும் வேறு வெளிச்சங்களையும் ஏந்தியவாறு பெண்கள் பேரணியாக சென்றுள்ளனர்.

சிலரின் கரங்களில் தேசிய கொடி காணப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆண்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீதி வேண்டும் என கோசமிட்டதுடன் சங்கொலியை எழுப்பியுள்ளனர்.

இரவு 12 மணியானதும் இந்தியாவின் சுதந்திர பிறப்பை குறிக்கும் விதத்தில ஆர்ப்பாட்டத்தின் போக்கு மாறியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.

அதன் பின்னர் கடும் மழையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நாங்கள் இவ்வாறு பெருமளவு பெணகள் அணிவகுத்தை பார்த்ததில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவின் பின்னர் தனது 13 வயது மகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டகலந்துகொண்ட பெண் ஒருவர் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மூலம் நிலைமையை சரிசெய்ய முடியுமா என மகள் பார்க்கட்டும்,அவள் தனது உரிமைகள் குறித்து விழிப்புணர்வை பெறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பெண்களிற்கு மதிப்பில்லை நாங்கள் காலநடைகளை விட மதிப்பற்றவர்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு :...

2026-08-11 16:32:23
news-image

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை...

2026-08-11 11:55:01
news-image

ஐந்து இலட்சத்தை காலி செய்த கரையான்...

2026-08-11 10:53:34
news-image

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 132 பேர்...

2026-08-11 09:17:21
news-image

இந்தியாவில் மதுபோதையில் இளைஞர்கள் செலுத்திய கார்...

2026-08-10 17:07:08
news-image

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ;...

2026-08-10 16:26:11
news-image

ஒரே படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக்...

2026-08-10 16:11:05
news-image

தாய்லாந்திலிருந்து இந்தியா சென்ற விமானம் நடுவானில்...

2026-08-10 15:31:27
news-image

குஜராத் மாநிலத்தில் கிணற்றில் ‘தானாகவே அலைபாயும்...

2026-08-10 15:19:57
news-image

சீனாவில் டொல்பின் சூறாவளி : ஷாங்காய்...

2026-08-10 13:29:56
news-image

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் :...

2026-08-10 13:14:46
news-image

போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் எடுத்த அதிரடித்...

2026-08-10 12:34:46