சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறை நபர் மரணம்!

Published By: Digital Desk 7

14 Aug, 2024 | 11:45 PM
image

கல்முனை நோக்கி பயணித்த நபர், கனரக வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று புதன்கிழமை  (14) காலை 7 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மட் றமீஸ் என்பவராவார்.

குறித்த நபர் வயல் வேலை செய்வதற்கான  நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42