bestweb

நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க மக்கள் தீர்மானிக்க வேண்டும் - ஆனந்தகுமார்

Published By: Digital Desk 7

13 Aug, 2024 | 09:12 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் எதிர்காலம் வளம்பெற வேண்டும் என்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற வேண்டும். இல்லாவி்ட்டால் நாடு மீண்டும் பழைய நிலைக்கே செல்லும். மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க ஏற்பாட்டாளர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

2019 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாகவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரசாரங்களின்போது இந்த விடயங்களை மக்களுக்கு நாங்கள் தெளிவாக தெரிவித்தோம். என்றாலும் அன்று மக்கள் நாங்கள் சொன்னதை நம்பவில்லை. இறுதியாக நாடு வங்குராேத்து அடைந்தது.

நாடு வீழ்ச்சியடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதற்கான வேலைத்திட்டமும் அவருக்கு அவருக்கு இருந்தது. அதனால்தான் குறுகிய காலத்தில் நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியுமாகி இருந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எதிர்கொண்டுவந்த துன்பங்களை மக்கள் மறந்துவிட முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம், ஆளுமையினாலே நாடு இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.

அதேநேரம் ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் பல தடவைகள் நாட்டின் பிரதமராக இருந்து எதனையும் செய்யவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர். பிரதமராக இருந்து அவரால் ஜனாதிபதியை மீறி செயற்பட முடியாது. அதனால் சில தீர்மானங்களை அவரால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் ஜனாதிபதியாக இருந்து எடுத்த தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மீள முடியுமாகி இருந்தது.

அதனால் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். சஜித் பிரேமதாசவோ அநுரகுரா திஸாநாயக்கவோ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்து, கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16