ஒலிம்பிக்கில் பதக்கம் பெறத் தவறினாலும் அழகினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பராகுவே வீராங்கனை ; ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் !

13 Aug, 2024 | 10:42 AM
image

ஒலிம்பிக்கின் மிகவும் கவர்ச்சிகரமான வீராங்கனை என வர்ணிக்கப்பட்ட  பராகுவேயின் நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சா பொருத்தமற்ற  சூழலை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒலிம்பிக்கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பார்கள் அவர்கள் அங்கு ஒருவருடன் ஒருவர் பழகுவார்கள்,பயிற்சியெடுப்பார்கள், ஒன்றாக உணவருந்துவார்கள் நேரத்தை செலவிடுவார்கள்.

எனினும் பராகுவே தனது வீராங்கனைகளில் ஒருவரை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றியுள்ளது.

பராகுவேயின் நீச்சல் வீராங்கனை லுவானோ அலோன்சா அரையிறுதிக்கு தகுதி பெற தவறிய ஒருவர்.

இன்ஸ்டாவில் 500,000 பேரால் பின்தொடரப்படும் அவர் பின்னர் தீடீரென தனது ஓய்வினை அறிவித்தார்.

ஆனால் அதன் பின்னரும் அவர் பரிசின் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்தார் - போட்டிகள் முடிவடைந்த பின்னரும் 11 ம் திகதிகள் வரை வீரர்கள் வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டார் என குற்றம்சாட்டி பராகுவே அணி முகாமையாளர்கள் இவரை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

எனினும் அவரது பொருத்தமற்ற நடவடிக்கை என்னவென்பது  குறித்து  விளக்கம் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.

அவரது பிரசன்னம் அணிக்குள் பொருத்தமற்ற சூழலை உருவாக்குகின்றது என அணியின் ஒலிம்பிக்கிற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்