தொடர் மின்தடையால் மக்கள் விசனம் : வட்டகொடையில் சம்பவம்

Published By: Priyatharshan

17 Apr, 2017 | 09:37 AM
image

கொத்மலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வட்டகொடை நகரில் நேற்று மாலை 7 மணி முதல் இது வரை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  

இவ்விடயம் தொடர்பாக கொத்மலை பிராந்திய மின்சார சபை காரியாலயத்திற்கும் கண்டியில் அமைந்துள்ள  மத்திய மாகாண தலைமை காரியாலயத்திற்கும் பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரை இன்று காலை வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும். வட்டகொட பிரதேசத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் இதுதொடர்பில் அறிவித்த போதிலும் அவர்களும் குறித்த மின் தடை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் இரவு முதல் அதிகாலை வரை வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றமையினால் அதில் நாம் முழுமையாக ஈடுபட முடியவில்லையெனவும் மின் தடை காரணமாக பல அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மின் தடைக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லையெனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

லொறியால் மோதிய வயோதிபரை வைத்தியசாலைக்கு கொண்டு...

2023-12-11 18:28:47
news-image

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை...

2023-12-11 18:32:29
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33