வயநாட்டில் நில அதிர்வால் மீண்டும் பதற்றம்: பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடமாற்றம்

10 Aug, 2024 | 09:15 AM
image

வயநாடு: வயநாட்டில் நேற்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.கடந்த மாதம் 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இந்த பேரழிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அதிர்ச்சியிலிருந்து அப்பகுதி மக்கள் மீள்வதற்குள் நேற்று வயநாடு பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது வயநாட்டின் அம்பலவாயல், மான்கொம்பு, அம்புகுத்தி மாளிகா, நென்மேனி, பதிபரம்பா, சுதனகிகிரி, சேத்துக்குன், கரட்டப்பிடி, மயிலாடிபாடி, சோழபுரம், தைகும்தரா ஆகிய கிராமங்களில் உணரப்பட்டதாக வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதோ என்று பயந்துவிட்டனர். பின்னர் அது வெறும் நிலஅதிர்வுதான் என்பது தெரிந்ததும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழகத்தில் புதிய வகை கொரோனாதொற்று இல்லை:...

2025-05-23 16:10:34
news-image

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்...

2025-05-23 13:27:47
news-image

ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை கடுமையாக தண்டித்தது...

2025-05-23 13:07:18
news-image

ஈரானின் அணுசக்திகட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்ள...

2025-05-23 11:02:22
news-image

கேரளாவில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு:...

2025-05-22 16:59:56
news-image

உலக அழகு ராணி போட்டியில் இருந்து...

2025-05-22 16:10:45
news-image

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள்...

2025-05-22 15:29:07
news-image

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்...

2025-05-22 15:06:12
news-image

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி...

2025-05-22 13:37:07
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளை...

2025-05-22 12:33:53
news-image

வொசிங்டனில் இஸ்ரேலிய தூதரக பணியாளர்கள் இருவர்...

2025-05-22 10:45:07
news-image

ஹஜ், உம்ரா நிகழ்வுகளை டிஜிட்டல் மயமாக்கும்...

2025-05-22 10:46:46