தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க தேசிய கொள்கை அமைக்க வேண்டும் - அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

Published By: Digital Desk 7

09 Aug, 2024 | 01:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

எமது நாட்டில் தனியார் துறைகளில் இலட்சக்கணக்கான மக்கள்  சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தொழில் பாதுகாப்பு, உழைப்புக்கு ஏற்ற சம்பளம் தொடர்பில் முறையான தேசிய கொள்கை அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின்  சேவை பாதுகாப்பு தன்மை, காப்புறுதி மற்றும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய போதுமான சம்பளம் தொடர்பில் தெளிவான முறைமை ஒன்று நாட்டின் சட்ட கட்டமைப்பில் இல்லை.

வருமான வரி திருத்தப் பிரச்சினை, நுகர்வோர் செலவு தொடர்பான அழுத்தம், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முறைமை, தொழில் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தனியார் துறை ஊழியர்கள் முகம்கொடுத்து வருகின்றனர். பால் இன சமத்துவம் உள்ளிட்ட முகம்கொடுத்துவரும் சவால்களுக்கு நாட்டில் தேசிய தொழில் கொள்கை ஒன்று இருக்க வேண்டும்.

குறிப்பாக, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவை செய்துவரும் எமது மக்களின் தொழில் உரிமை, பாதுகாப்பு , மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனால் தேசிய தொழில் பாதுகாப்பு கொள்கை ஒன்றை முன்வைத்து தனியார் துறையில் இருக்கும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின்...

2025-05-24 15:24:17
news-image

துப்பாக்கி முனையில் மிரட்டி நகைக்கடையில் கொள்ளை:...

2025-05-24 14:50:58
news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10