கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு சி.டி. ஸ்கேன், இரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழப்பு

08 Aug, 2024 | 08:08 PM
image

(செ.சுபதர்ஷனி)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த இரு சிரி ஸ்கேன் இயந்திரங்களும், இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்தோடு இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.

தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திர செயலிழப்பு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாடளாவிய ரீதியில் பெருமளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக சமூகமளிக்கும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த நான்கு ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளன. அவற்றுள் இரு சிரி ஸ்கேன் இயந்திரங்களும் இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களும் உள்ளடங்குகின்றன.  இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

தற்போது வைத்தியசாலையில் உள்ள இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் பரிசோதனைக்காக காத்திருக்கும் நோயாளர்களின் பட்டியல் நீண்டுள்ளது. குறித்த இயந்திரங்களில் முதல் இயந்திரம் பழுதாகி 5 மாதங்கள் கடந்துள்ளதுடன் இரண்டாவது இயந்திரம் பழுதாகி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. மேலும் சிரி ஸ்கேன் இயந்திரங்களில் முலாவது இயந்திரம் பழுதாகி 4 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாவது இயந்திரம் செயலிழந்து இரு நாட்கள் கடந்துள்ளன. 

இதனால் பட்டியலிடப்பட்டுள்ள நோயாளிகளுக்கான பரிசோதனைகளையும் இடைநிறுத்த வேண்டியது. பரிசோதனைகளை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால் உரிய சிகிச்சைகளை வழங்கமுடியாதுள்ளது இதனால் உயிராபத்துக்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகளும் அதிகரித்துள்ளன. பழுதடைந்துள்ள இயந்திரங்களை காலதாமதமின்றி மீள் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 10:24:11
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39
news-image

தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு...

2025-01-14 10:58:38
news-image

வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன்...

2025-01-13 18:17:37
news-image

ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் - இந்துக்...

2025-01-13 18:21:56
news-image

அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு ஆளும் காட்சியால்...

2025-01-13 18:01:30