செப்டம்பரில் வெளியாகும் யோகி பாபுவின் 'மலை'

Published By: Digital Desk 7

08 Aug, 2024 | 08:15 PM
image

தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் முதன்முறையாக வில்லனாக நடிக்கும் 'மலை' எனும் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஐ பி முருகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மலை' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட், சிங்கம் புலி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் பணிகள் தொடங்கி, படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இதனிடையே யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வெளியான 'போட்' எனும் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றுள்ளதால் அவரது நடிப்பில் தயாராகும் 'மலை' எனும் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையேயும் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right