கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் படுகொலை ; மேலும் ஒருவர் கைது !

07 Aug, 2024 | 11:49 AM
image

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர், தெற்கு அதிவேக வீதியின் சேவா சதுக்கத்தில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டு பின்னர் அதுருகிரிய பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தர்கா நகரை சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.  

கைது செய்யப்பட்டசந்தேக நபர், இந்த கொலை சம்பவத்திற்காக இரு துப்பாக்கிதாரிகளை ஆயுதங்களுடன் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருந்து அத்துருகிரிய பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வாடகை வீடொன்றையும் வாடகை வண்டியையும் பெற்றுக்கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய கார் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27