(துரைநாயகம் சஞ்சீவன்)
சிவில் அமையத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட குவேனி பழங்குடி அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலைமுந்தல் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) கரையோர பழங்குடிகளுக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பழங்குடி மக்கள் தங்களின் வாழ்க்கைமுறை தொடர்பான காட்சிப்படுத்தலையும், நிகழ்வுகளையும் மேற்கொண்டிருந்தார்கள்.
அத்துடன் பழங்குடி மக்கள் அரசியல் பொருளாதார சமூக கலாசார பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் தொடர்பாக இருபது பரிந்துரைகள் அடங்கிய மகஜரும் வருகை தந்திருந்த உயர் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய இணைப்பாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM