யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (03) தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதால் அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனையின்போது குழந்தையின் கைகள், கால்களின் எலும்புகளில் முறிவுகள், தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள், கண்டல் காயங்கள் போன்றவை கண்டறியப்பட்ட நிலையில், குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என அறிக்கையிடப்பட்டது.
அதனையடுத்து குழந்தையின் தாயாரை கைது செய்த பொலிஸார், தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குழந்தை பால் குடிக்க மறுத்தமையால், அதன் கைகள், கால்களை திருகியதாகவும், தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால், தலையை சுவரில் மோதியதாகவும் குழந்தையின் கால்களை தான் ஏறி மிதித்தாகவும், காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியதாகவும் விசாரணையின்போது குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் குழந்தையின் தாயை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, அவரை 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கவும் தாயை மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, மருத்துவ அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM