யாழில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு - சித்திரவதை செய்ததாக வாக்குமூலமளித்த தாய்க்கு விளக்கமறியல்

06 Aug, 2024 | 03:56 PM
image

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (03) தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதால் அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. 

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 உடற்கூற்று பரிசோதனையின்போது குழந்தையின் கைகள், கால்களின் எலும்புகளில் முறிவுகள், தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள், கண்டல் காயங்கள் போன்றவை கண்டறியப்பட்ட நிலையில், குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என அறிக்கையிடப்பட்டது. 

அதனையடுத்து குழந்தையின் தாயாரை கைது செய்த பொலிஸார், தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குழந்தை பால் குடிக்க மறுத்தமையால், அதன் கைகள், கால்களை திருகியதாகவும், தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால், தலையை சுவரில் மோதியதாகவும் குழந்தையின் கால்களை தான் ஏறி மிதித்தாகவும், காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியதாகவும் விசாரணையின்போது குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். 

விசாரணைகளின் பின்னர் குழந்தையின் தாயை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, அவரை 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கவும் தாயை மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, மருத்துவ அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19