bestweb

மஹிந்தவின் ஆலோசனைக்கமையவே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினோம் - பிரசன்ன ரணதுங்க

Published By: Vishnu

06 Aug, 2024 | 04:16 AM
image

(இராஜதுரை ஹஷான்)

2022 மே 09 வன்முறை சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள், வன்முறை சரி என்று தற்போது குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக அறிவிப்பதாக இருந்தால் சுயாதீனமாக தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் குறிப்பிட்டார்.

அதற்கமைவாகவே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினோம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா – உடுகம்பொல பகுதியில் திங்கட்கிழமை (5) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022 மே 09 வன்முறை சம்பவம் பற்றி தற்போது பேசப்படுகிறது. அலரிமாளிகையில் அரசியல் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று 2022.05.08 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினேன். முறையற்ற வகையில் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என்று நான் குறிப்பிட்டேன்.

எமது ஆலோசனைகளுக்கு எதிராக கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் எமது ஆதரவாளர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட்டார். வன்முறைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தற்போது வன்முறை சரி,அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சரி என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

வீடுகள் தீக்கிரையானதை வரவேற்கும் தரப்பினருடன் இணைந்து எவ்வாறு அரசியல் செய்ய முடியும். கட்சியின் நலன் என்று குறிப்பிட்டுக் கொண்டு தங்களின் தனிப்பட்ட இலக்கை அடைந்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இவர்களின் செயற்பாடுகளினால் கட்சி மேலும் பலவீனமடையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருந்தார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் குறிப்பிட்டார். அதற்கு அமையவே ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16