பொலிஸ்மா அதிபர் விவகாரத்தில் சட்டமா அதிபரிடம் அபிப்பிராயம் கோரினார் சபாநாயகர்

Published By: Vishnu

06 Aug, 2024 | 04:03 AM
image

(நா.தனுஜா)

சர்ச்சைக்குரிய பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் அபிப்பிராயம் கோரியுள்ளார்.

அண்மையில் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

இருப்பினும் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராகக் களமிறங்குவதால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதிலிருந்து விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதேபோன்று அரசியலமைப்புப்பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உயர்நீதிமன்றத்தினால் கேள்விக்குட்படுத்தமுடியாது எனவும், ஆகவே இவ்விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் இல்லை எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து சபாநாயகரும், பிரதம நீதியரசரும் கலந்துரையாடி தீர்வுகாணவேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் பிரதம நீதியரசருடன் கலந்துரையாட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

 இருப்பினும் சிக்கல் அடைந்திருக்கும் பொலிஸ்மா அதிபர் விவகாரத்துக்கு முறையாகத் தீர்வு காண்பதற்கான சட்ட நுணுக்கங்கள் தொடர்பில் சபாநாயகர் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் அபிப்பிராயம் கோரியுள்ளார். 

அதன்படி இவ்விடயத்தை உரியவாறு கையாள்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நகர்வுகள் தொடர்பில் அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04