யாழில் உயிரிழந்த ஒன்றரை மாத குழந்தை : உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! - தாயிடம் விசாரணை  

04 Aug, 2024 | 03:43 PM
image

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில்  உயிரிழந்த ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்திருந்தமை, தலையில் அடிகாயங்கள், காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள், உடலில் கண்டல் காயங்கள் உடற்கூற்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. 

நேற்றைய தினம் சனிக்கிழமை (03) குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்றுக் கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு  கொண்டு சென்றுள்ளார். 

குழந்தையை அங்கிருந்து  தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றியபோது, குழந்தை உயிரிழந்துள்ளது. 

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டதில், குழந்தையின் கைகள் மற்றும் கால்களில் முறிவு, தலையில் அடிகாயங்கள் , காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன் உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

இந்நிலையில், குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலேயே குழந்தை இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் குழந்தையின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19