மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக இழக்கப்பட்ட ஜீ.எஸ்.பிளஸ் வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு மே மாதம் கிடைக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு இலங்கை வந்துள்ளது.
இந்த குழுவினரால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்படும் தொழில்நுட்ப அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பெல்ஜியம் - பிரசெல்ஸ் நகரில் இடம்பெற உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள முன்னேற்ற அறிக்கையை மதிப்பீடு செய்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பணியாக உள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட கூட்டத் தொடரில் மதிப்பீட்டு குழுவின் அறிக்கை சாதகமான தன்மைகளை வெளிப்படுத்தினால் மே மாதத்தில் இருந்து ஜீ.எஸ்.பி
வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை குழு திங்கட்கிழமை பெல்ஜியம் செல்ல வுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM