(லியோ நிரோஷ தர்ஷன்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. சுயாதீன வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரிய கடிதத்தை பரிசிலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (01) இரவு இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே மேற்கண்டவறு குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது தனித்து வேட்பாளரை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்தது. இதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் சுமார் 90 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை என்றும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து கட்சியில் தீவிர பிளவுகள் ஏற்பட்டது.
எனினும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஓரணியில் பயணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் பிரகாரமே இருதரப்பு சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. தனிப்பட்ட தீர்மானமாக இல்லாது, கட்சியின் ஏகோபித்த தீர்மானமாகவே ஜனாதிபதி வேட்பாளர் விடயம் இருக்க வேண்டும். எனவே, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம் என்று இதன்போது மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சி அரசியலுக்குள் சிக்கி நாட்டின் எதிர்காலத்தை சீரழித்துவிடக்கூடாது என்பதற்காகவே சுயாதீன வேட்பாளராக போட்டியிடுகின்றேன். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை நிலையானதொரு அபிவிருத்திக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான ஒருமைப்பாடு நமக்குள் ஏற்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் நிலையில் ஆதரவு கோரி அனுப்பிய கடிதத்தை பரிசிலித்துள்ளேன். ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் தனித்து தீர்மானிக்க இயலாது. இவ்வாரத்துக்குள் வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்துவிடுவோம் என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM