பிலியந்தலையில் விபத்து ; கணவர், மனைவி உட்பட மூவர் காயம்

03 Aug, 2024 | 12:36 PM
image

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற விபத்தில் கணவர், மனைவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

காயமடைந்த கணவர், மனைவி இருவரும் களுபோவில வைத்தியசாலையை நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது பாடசாலையை முடித்து வீட்டிற்குச் செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியொருவரை கண்டுள்ளனர்.

இந்நிலையில், கணவர், மனைவி இருவரும் பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியில் ஏற்றி பிலியந்தலை பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியுடன் இரண்டு கார்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த 74 வயதுடைய கணவரும் 68 வயதுடைய மனைவியும் பாடசாலை மாணவியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-22 06:30:28
news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21