கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 171 பாரிய திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இவற்றில் 58 செயற்றிட்டங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிநீர், சுகாதாரம், கல்வி, வீதிகள் போன்ற துறைகள் தொடர்பான 58 திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள 171 திட்டங்களில் 02 வெளிநாட்டு மானிய திட்டங்கள், 03 வெளிநாட்டு கடன் திட்டங்கள் மற்றும் 08 திட்டங்கள் உள்ளூர் நிதியில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அந்த 08 திட்டங்களும் உள்ளடங்கலாக நிதியமைச்சின் அறிக்கைகளின்படி, அடுத்த வருடத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை 113 ஆகும்.
கொவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பல பெரிய அளவிலான திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. அவற்றுள் வெளிநாட்டு உதவி மற்றும் கடனில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர், இந்த செயற்றிட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அவர் தலையிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படவேண்டிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். இது எதிர்வரும் ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும் என்று அமைச்சர் கருதுகிறார்.
“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு பாதியில் நிறுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமை நல்ல சான்றாகும். நாடு மறுவளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகள் என்ன அவதூறுகளை கூறினாலும் தற்போதைய ஜனாதிபதியின் கீழ் நாடு மீண்டு வருகிறது" என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM