(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3 - 0 என முழுமையாகக் சுவீகரித்தது.
இந்தியாவும் இலங்கையும் தலா 137 ஓட்டங்களைப் பெற்றதால் சுப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டது.
வொஷிங்டன் சுந்தர் வீசிய சுப்பர் ஓவரில் குசல் ஜனித் பெரேராவும் பெத்தும் நிஸ்ஸன்கவும் ஆட்டம் இழந்ததுடன் இலங்கையினால் 3 பந்துகளில் 2 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
மஹீஷ் தீக்ஷன வீசிய சுப்பர் ஓவரின் முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவ் பவுண்டறி அடித்து இந்தியாவுக்கு சுப்பர் ஓவர் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
இப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது.
இலங்கை துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எவ்வாறாயினும் பெத்தும் நிஸ்ஸன்க தவறான அடி தெரிவினால் 26 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸும் குசல் பெரேராவும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைக் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் போன்றே மத்திய வரிசையில் விக்கெட்களை தாரை வார்த்ததால் இலங்கையின் வெற்றி வெகுதூரத்திற்கு சென்றுவிட்டது.
16ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இலங்கை அதன் பின்னர் 24 பந்துகளில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்களை இழந்தது. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
குசல் மெண்டிஸ் (43), வனிந்து ஹசரங்க (3), அணித் தலைவர் சரித் அசலன்க (0) குசல் பெரேரா (46), ரமேஷ் மெண்டிஸ் (1), கமிந்து மெண்டிஸ் (1), மஹீஷ் தீக்ஷன (0) ஆகிய எழுவர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை சூரியகுமார் யாதவ் வீச தீர்மானித்தார்.
70 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பந்துவீசாமல் இருந்த சூரியகுமார் யாதவ் மிகவும் நெருக்கடியான வேளையில் கடைசி ஓவரை துணிந்து வீசி 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க 2 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா பெரும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க முதலாவது ஒவரை மிகத் திறமையாக வீசி இந்தியாவின் அதிரடி துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தி 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார். அத்துடன் தனது 2ஆவது ஓவரில் முதலாவது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவர் தனது 4 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம்தன்னை அணிக்கு தெரிவு செய்தது மிகவும் சரி என்பதை நியாயப்படுத்தினார்.
முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்தியா இந்தப் போட்டியில் பவர் ப்ளேயில் 4 விக்கெட்களை இழந்து வெறும் 30 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது.
ஆரம்ப வீரர் ஷுப்மான் கில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரியான் பராக்குடன் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.
ஷுப்மான் கில்லைவிட ரியான் பராக் 26 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ரமேஷ் மெண்டிஸ் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்: வொஷிங்டன் சுந்தர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM