விமானப் பணிப்பெண்ணின் கையை பிடித்துத் தகாத வார்த்தைகளால் திட்டிய பயணி கைது !

30 Jul, 2024 | 05:32 PM
image

குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானமொன்றில் சேவையாற்றிய பணிப்பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படும் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் இன்று (30) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான U.L - 230 என்ற விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவராவார். 

சந்தேக நபர் குறித்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அதே விமானத்தில் சேவையாற்றிய பணிப்பெண் ஒருவரின் கையை இறுக்கிப் பிடித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பணிப்பெண் இது தொடர்பில் விமானக் குழுவிடம் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், விமானக் குழு இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி இது தொடர்பில் தெரிவிக்கையில், 

எனது கணவர் கடந்த 14 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் மாரடைப்பு நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக மீண்டும் நாட்டுக்கு திரும்பினார்.

சம்பவத்தன்று விமானக் குழுவினர் எனது கணவரை பலமாக தாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.                        

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45