(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிரணியாகவே செயற்படுவோம். நாட்டின் ஒற்றையாட்சி, தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே அரசியல் தீர்மானத்தை எடுத்துள்ளோம். பொதுஜன பெரமுனவின் கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்டவர்கள் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சியை பலப்படுத்துவதற்காகவே கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு அமைய செயற்பட போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரணியாகவே நாங்கள் செயற்படுவோம்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று கட்சியின் நிறைவேற்று குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பவர்கள் இன்று என்னை வந்து சந்தித்தார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர்களில் பெரும்பாலானோர் உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை.
ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று நாங்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை. கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே தீர்மானம் எடுத்துள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி நிச்சயம் வெற்றி பெறும். கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்கள் தற்போதும் கட்சியின் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்.
ஆகவே கட்சியின் தீர்மானத்துக்கு அமைய செயற்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM