மஹிந்த, பொதுஜன ஐக்கிய முன்னணியை விட நாட்டையே அதிகம் நேசிக்கின்றேன் - அமைச்சர் பந்துல !

30 Jul, 2024 | 01:06 PM
image

(எம்.மனோசித்ரா)

மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தீர்மானத்தை பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பொதுஜன ஐக்கிய முன்னணியையும் விட நாட்டையே அதிகம் நேசிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை  (30) இடம்பெற்ற போது இதனைத்தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விஜேதாச ராஜபக்ஷ அமைச்சு பதிவயை இராஜிநாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தவிர, தேர்தல் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியல் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தோம். இதன் போது மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், எனவே தனக்கு ஆதரவளிக்குமாறும் கோரி அனுப்பி வைத்திருந்த கடிதம் தொடர்பில் இதன் போது அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டு, மேலும் 72 பேருடை இல்லங்கள் தீர்க்கிரையாக்கப்பட்டு நாடு முழுவதிலும் வன்முறை தலைதூக்கியிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் அமைதியை நிலைநாட்டினார்.

அது மாத்திரமின்றி பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் அவரே நாட்டை மீட்டெடுத்தார். எனவே அவருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளரொருவரை களமிறக்குவதற்கான தீர்மானத்துக்கு எதிராகவும் நாம் வாக்களித்தோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும், பொதுஜன ஐக்கிய முன்னணி மீதும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கின்றோம்.

ஆனால் அதனை விட நாட்டையே அதிகம் நேசிக்கின்றோம். நாட்டின் எதிர்கால பயணம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை முறையாக முன்னெடுத்து செல்லக் கூடிய ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்ற அடிப்படையிலேயே நாம் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42