130 ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் பலி!

Published By: Devika

11 Apr, 2017 | 11:34 AM
image

ஹைதராபாத் உணவகம் ஒன்றில், உபரியாகக் கிடைத்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஊழியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத், காஞ்சன்பக் நகரின் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜூ மற்றும் கமலேஷ் ஆகிய இருவரும் உணவகத்துக்கு வருபவர்கள் தரும் உபரிப் பணத்தைப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். கடந்த ஞாயிறு கிடைத்த உபரிப் பணத்தில் 130 ரூபாயை ராஜூ தனக்குத் தரவில்லை என கமலேஷ் சந்தேகப்பட்டார்.

திங்களன்று காலை உணவகத்துக்கு வந்த ராஜூவிடம், தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தருமாறு கமலேஷ் கேட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட சண்டையில் கமலேஷ், ராஜூவைக் கீழே தள்ளினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்த ராஜூவின் தலை கல்லில் மோதியதால் அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.

இதையறிந்த உணவகத்தின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் கமலேஷைக் கைது செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது வெற்றியே யுத்தநிறுத்தஉடன்படிக்கையை சாத்தியமாக்கியது –...

2025-01-16 00:32:44
news-image

ஆறுவார கால யுத்த நிறுத்தம் -...

2025-01-16 00:12:39
news-image

தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான...

2025-01-15 17:13:04
news-image

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க...

2025-01-15 13:32:17
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை...

2025-01-15 12:31:56
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையில் இஸ்ரேல்...

2025-01-15 11:11:31
news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45
news-image

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் உருண்டை வடிவிலான...

2025-01-15 09:25:20
news-image

தென்கொரிய ஜனாதிபதி சற்று முன்னர் கைது

2025-01-15 08:13:44
news-image

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய மீண்டும் முயற்சி-...

2025-01-15 07:05:42
news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36