சதுப்பு நிலக் காடுகளைப் பேணலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் வகையிலான நிகழ்நிலை வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இப்பரிசளிப்பு நிகழ்வு வட்டு. இந்து கல்லூரி சோமசுந்தரப்புலவர் அரங்கில் நேற்று (26) நடைபெற்றது.
இந்த நிகழ்வை கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் Clean Ocean Forces மற்றும் எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடாத்தியிருந்தது.
இந்த நிகழ்வில் பிரபல உயிரியல் ஆசான் S.V.குணசீலன், கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி சதீஷ், Clean Ocean Forces மற்றும் எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழல் கழகம் சார்பில் மனோகரன் சசிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்தோடு, குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அதிக மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து பங்குபற்றி வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவருக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM