(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்திற்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை 10 விக்கெட்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், சுழல்பந்துவீச்சாளர் ராதா யாதவ் ஆகிய இருவரும் தங்களிடையே 6 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு அடிகோலினர்.
அவர்கள் இருவரின் பந்துவீச்சுகளின் உதவியுடன் பங்களாதேஷை குறைந்த எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்திய இந்தியா, தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் அசத்தி வரும் ஆரம்ப வீராங்கனைகளின் உதவியுடன் வெற்றி இலக்கை இலகுவாக கடந்தது.
இந்த வெற்றியுடன் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சகல இறுதிப் போட்டிகளிலும் விளையாடுவதை இந்தியா உறுதிசெய்துகொண்டது.
தற்போது நடைபெற்றுவரும் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா எதிர்தாடும்.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
முதல் 3 விக்கெட்களை பவர் ப்ளேக்குள் ரேணுகா சிங் வீழ்த்தியதால் பங்களாதேஷ் திக்குமுக்காடிப்போனது.
அணித் தலைவி நிகார் சுல்தான் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடி 32 ஓட்டங்களைப் பெற்றார். ஷொர்ணா அக்தர் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ரேணுகா சிங் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராதா யாதவ் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியிட்டியது.
ஸ்ம்ரித்தி மந்தனா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஷபாலி வர்மா ஆட்டம் இழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆட்டநாயகி: ரேணுகா சிங்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM