பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சபாநாயகர் இடமளிக்கக்கூடாது - ரவூப் ஹக்கீம்

Published By: Digital Desk 3

26 Jul, 2024 | 07:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தனக்கு தேவையான பொலிஸ்மா அதிபரை வைத்துக்கொண்டு ஏதாவது சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவே முயற்சிக்கிறார். அதேபோன்று,  பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முற்படுகிறார்கள்.  அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம். இதன் பயங்கரமான நிலையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் பிரதமரின் விசேட உரைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின் ஒரு பகுதி என்ற கருத்தை பிரதமர் தெரிவிக்கிறார். ஆனால் இந்த சபையில் ஜனாதிபதி இதற்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று துறையின் ஒரு பகுதி என விவாதிட்டிருந்தார். அதனால் தங்களுக்கு தேவையான முறையில் இதற்கு பொருள்கோடல் தெரிவிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சபாநாயகர், எமது அனைத்து உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காக நாங்கள் அனைவரும் நியமித்துக்கொண்ட ஒருவர். அதனால் சபாநாயகரை பாதுகாக்கும் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. 

அரசியலமைப்பு பேரவையின் தலைவராக நீங்கள் எடுத்த தீர்ப்பொன்றை சவாலுக்குட்படுத்தியே குறித்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உங்களது தர்க்கத்தை கருத்திற்கொண்டுதான் உயர் நீதிமன்றம் வேறு ஒரு நபரின் பதவி தொடர்பில் உத்தரவு வழங்கி இருக்கிறது. அது உங்களுக்கு உரியதல்ல. அதனால் இதில் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம். 

உங்களை பழிக்கடாவாக்கிகொண்டு, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தனக்கு தேவையான பொலிஸ்மா அதிபரை வைத்துக்கொண்டு ஏதாவது சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவே முயற்சிக்கிறார். அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம். 

அதேபோன்று  பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது.  அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம். இதன் பயங்கரமான நிலையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02