கொழும்புசந்தையில் பட்டியலிடப்பட்ட வடக்கை சேர்ந்த பெண் தலைமைதாங்கும் முதலாவது நிறுவனம்- மகாராஜா புட்ஸிற்கு அமெரிக்க தூதுவர் பாராட்டு

26 Jul, 2024 | 04:41 PM
image

கொழும்புசந்தையில் பட்டியலிடப்பட்ட வடக்கை சேர்ந்த பெண் தலைமைதாங்கும் முதலாவது நிறுவனமான மகாராஜா புட்ஸிற்கு  மகாராஜா புட்ஸிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்புசந்தையில் பட்டியலிடப்பட்ட வடக்கை சேர்ந்த பெண் தலைமைதாங்கும் முதலாவது நிறுவனம் என்ற பெருமையை மகாராஜா பூட்ஸ் லிமிடெட் பெற்றுள்ளது.

நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தவமாலா குகநாதனின் சாதனையை கொண்டாடும் நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்;ச்சியடைகின்றேன்.

யுஎஸ்எயிட்ஸ் ஆதரவுடன் அவரது விடாமுயற்சி வீடுசார்ந்த வணிகத்தை ஒரு வளர்ந்துவரும் தொழில்துறையாக மாற்றியுள்ளதுடன் பல இலங்கையர்களிற்கு ஒரு உந்துசக்தியாக மாறியுள்ளது.

அவரது நிறுவனம் போன்ற உள்நாட்டில் ஆரம்பித்து சர்வதேசத்தினை நோக்கி விரிவடையும்  சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிற்கு ஆதரவளிப்பது குறித்து  அமெரிக்கா பெருமிதமடைகின்றது.

மேலும் இலங்கையின் அனைத்து பின்னணியை சேர்ந்தவர்களினதும் தொழில்முனைவோரின் கனவுகளை  ஊக்குவிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right