(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கே காணப்படுகிறது. அதனால் இந்த பிரச்சினைக்கான தீர்வை அரசியலமைப்பு பேரவையே எடுக்க வேண்டும் எனச் சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தடையுத்தரவு சம்பந்தமாகப் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) தெளிவுபடுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
சபை முதல்வர் என்பவர் சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர். அந்த செயற்பாடுகளையே நான் செய்கின்றேன். அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நான் தெளிவுபடுத்தியுள்ளேன் எனினும் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகரே.
அரசியலமைப்பின் உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஜனாதிபதி பெயர் குறித்து அனுப்புவாரானால் அதனை உறுதிப்படுத்துவது அரசியலமைப்பு பேரவையே.
பொலிஸ் மா அதிபரின் சேவை தொடர்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளதா? அந்தப் பதவியை இடைநிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தினால் முடியும். அரசியலமைப்பின் 126 வது சரத்தின் படி அது சரி. சட்டத்தரணி என்ற வகையில் நானும் அதற்கு இணங்குகிறேன். பதவியை வெற்றிடமாக்காமல் பதவி நிறுத்தப்பட்டே உள்ளது. பதவி ஒன்று வெற்றிடமாக இல்லாவிட்டால் அதற்கான பதில் நியமனம் வழங்குவது எவ்வாறு?
அவ்வாறென்றால் அரசியலமைப்பு பேரவை அந்த பிரச்சினையை மீண்டும் சபாநாயகருக்கு வழங்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்றால் அவருக்குப் பதிலாகப் பதில் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். அது தொடர்பில் அரசியலமைப்பில் எதுவும் கிடையாது.எனினும் இந்த நியமனம் தொடர்பில் அரசியலமைப்பில் 7(ஆ) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இந்த நாட்டின் முக்கியமான சட்டமாகும். அதனை ஒருபோதும் மீற முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM