இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு கட்டமைக்கப்பட்ட விலையிடும் பொறிமுறைக்கான அவசரத் தேவை

22 Jul, 2024 | 08:28 PM
image

இலங்கையில் நீண்ட காலமாக எவ்வித முன்னேற்றமுமின்றி, மருந்துப் பொருட்களுக்கு நியம விலையிடல் தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது. அது ஏன் என கேட்பதற்கான காலம் இதுவாகும்.

நோய்களை குணமாக்குவதற்கு மருந்துகள் முக்கியமானவையாகும், அதன் விலையிடல் என்பது பலாபலன், பாதுகாப்பு மற்றும் சகாயத்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். தரத்தை உறுதி செய்யாமல், மிகவும் குறைந்த விலைகளில் மருந்துப் பொருட்களை விற்பனை செய்வது என்பது விரயமாவது மாத்திரமன்றி, ஆபத்தானதும் கூட. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து ஏற்பட்ட மோசமான சம்பவங்கள் அண்மையில் பதிவாகியிருந்ததுடன், அவை குற்றச் செயல்களாக அமைந்திருப்பதுடன், நோயாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. அதுபோன்றே, அளவுக்கதிகமான விலை நிர்ணயத்தினூடாக, மருந்துப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் நுகர்வோரின் செலவில் இலாபமீட்டுகின்றன. இந்த விடயம் முழுமையான பரிசீலனையையும், பரந்தளவு பங்காளர்களிடமிருந்து தலையீட்டையும் எதிர்பார்ப்பதாக அமைந்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட சகல மருந்துப் பொருட்களுக்கும் விலை நிர்ணய பொறிமுறையை நியமிப்பதற்காக பல்வேறு நிபுணர்களை உள்ளடக்கிய விலை நிர்ணய குழுவொன்றை நியமிக்குமாறு தேசிய மருந்துப் பொருட்கள் சட்டம் கோரியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தெளிவில்லாத காரணங்களால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த படிமுறைகள் தொடர்பில் இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை. 

போலியான, தரம் குறைந்த மருந்துப் பொருட்களை தவிர்ப்பதற்கு, பிரயோக விலை நிர்ணய பொறிமுறையை கொண்டிருப்பது அத்தியாவசியமானதாகும். இறக்குமதி செய்யப்படும் அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் அந்நியச் செலாவணியில் தங்கியுள்ளன. விற்பனையாளர்களுக்கு நாணய தளம்பல்களுக்கு எதிராக பாதுகாப்பு அவசியமாகின்றது. மேலும், சகல மருந்துப் பொருட்களும் பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலைகளில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும். இதற்கும் பெருமளவு செலவு ஏற்படும். யுத்தங்கள் மற்றும் இதர தடங்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச பணவீக்கமான சூழ்நிலையால், இயற்கையாகவே மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு காரணமாகின்றன. இதனால் உள்நாட்டு விற்பனை விலைகளிலும் தாக்கங்கள் ஏற்படுகின்றன. மருந்துப் பொருட்கள் உற்பத்தி என்பதில் மூலப் பொருட்கள் மாத்திரம் ஈடுபாட்டைக் கொண்டிருப்பதில்லை, விசேட பொதியிடலுக்கான தேவைகளையும் கொண்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் அதிக ஈரப்பதனுடான காலநிலை காரணமாக, அவற்றை உறுதியாக பேண இது உதவுகின்றது.

எதிர்மறையான தாக்கத்தைப் பற்றி அறிந்தவர்கள், தரம் குறைந்த பரிசீலிக்கப்படாத தயாரிப்புகளை தவிர்ப்பதுடன், அதனூடாக சிகிச்சை பலனின்மை மற்றும் பெறுமதியான நேரத்தை இழப்பு போன்றவற்றை தவிர்த்துக் கொள்கின்றனர். மாறாக, பிரத்தியேக பாவனைக்கு வர்த்தக நாமமிடப்பட்ட தயாரிப்புகளை தெரிவு செய்கின்றனர். தமது மருந்துகளுக்கு கட்டணம் செலுத்த எதிர்பார்க்கும் பொது மக்களுக்கு அவ்வாறான தெரிவு கிடைக்கக்கூடாதா? அசாதாரணமான விலை நிர்ணயம் காரணமாக, சந்தையிலிருந்து பல நம்பிக்கையை வென்ற நாமங்கள் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதிகாரதரப்பினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக்கூடிய விற்பனை விலையின் துல்லியத்தன்மை மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மை போன்றன தொடர்பிலும் இந்த அறிக்கை கேள்வி எழுப்பியிருந்தது.

சுகாதார அமைச்சின் தேசிய மருந்துப் பொருட்கள் தர உறுதிப்படுத்தல் அமைப்பு, முறையான தரப் பரிசோதனைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் எதிர்நோக்கியுள்ளது. விற்பனையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் மருந்துப் பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், குறைந்த விலைகள் காரணமாக தரம் குறைந்த தயாரிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தரமின்மை காரணமாக அரச வைத்தியசாலைகளிலிருந்து பல மருந்துப் பொருட்கள் மீளப் பெறப்பட்டுள்ளன. இதனால் பெருமளவு செலவுகளும் ஏற்பட்டுள்ளன.

கட்டமைக்கப்பட்ட விலை நிர்ணய பொறிமுறை என்பது அவசரத் தேவையாக அமைந்திருப்பதுடன், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என சகலரையும் உள்வாங்கி இது அமைந்திருக்க வேண்டும். அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற என வகைப்படுத்தப்பட்டதாக இந்த பொறிமுறை அமைந்திருப்பதுடன், பணவீக்கம் மற்றும் இதர செலவுகளையும் கவனத்தில் கொள்வதாக அமைய வேண்டும். தரமான மருந்துப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், அதனூடாக ஆரோக்கியமான சமூகத்துக்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024 மருந்துப் பொருட்கள் பற்றிய விசேட அறிக்கையின் பிரகாரம் இந்த ஆக்கம் அமைந்திருப்பதுடன், இலங்கையில் மருந்துகளின் விலையிடல் மற்றும் தரத்தை உறுதி செய்தலுக்கான அவசர நியமங்களை ஏற்படுத்துவதற்கான தேவையையும் வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்த 100...

2025-05-23 11:41:15
news-image

அசெட்லைன் நிதி நிறுவனம் கடன் தர...

2025-05-22 18:28:35
news-image

சிங்கர் மற்றும் HUTCH கூட்டாண்மை :...

2025-05-22 11:31:44
news-image

மனநிறைவு அளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின்...

2025-05-21 16:56:14
news-image

மனநிறைவளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின் புனித...

2025-05-21 11:03:23
news-image

HP அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் கொள்வனவு செய்யப்படும்...

2025-05-20 11:21:59
news-image

கெச்சிமலை கடற்கரையை பாதுகாக்கும் முயற்சியில் இலங்கை...

2025-05-20 10:57:38
news-image

“வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” – யூனியன்...

2025-05-17 13:28:22
news-image

மக்கள் வங்கி 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-05-17 14:22:16
news-image

தரநிலைக்கும் உற்பத்தித் திறனுக்குமான இலங்கையின் முதன்மை...

2025-05-17 14:21:36
news-image

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி...

2025-05-16 16:43:08
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக...

2025-05-16 13:33:16