திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்களின் நலன்களை காப்பதில் முன்னணி வகிக்கும் நட்சத்திர நடிகர் அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இப் படபிடிப்புடன் 'விடாமுயற்சி' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக இந்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளி திருநாளான ஓக்டோபர் 31 ஆம் திகதியன்று வெளியாகும் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM